search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி
    X

    மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்ட காட்சி.

    ஆலங்குளத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி

    • ஆலங்குளம் வட்ட ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் வட்ட ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. முதல் நாள் கீழப்பாவூர் குறுவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார். இன்று நெட்டூர், நாளை (26-ந்தேதி) புதுப்பட்டி, 30-ந்தேதி வெங்கடாம்பட்டி, 31-ந்தேதி ஆலங்குளம் குறுவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் தாசில்தார் கிருஷ்ணவேல், கீழப்பாவூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ.க்கள், நில அளவைப்பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×