என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வருகிற 14,21-ந் தேதிகளில் 7.10 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை- நெல்லை மாவட்ட கலெக்டர் தகவல்
- தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அல்பெண்ட சோல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
- குடற்புழு மாத்திரை உட்கொள்வதினால் குழந்தைகளுக்கு குடற்புழுவினால் ஏற்படும் ரத்தசோகையை தடுக்கலாம்.
நெல்லை:
நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அல்பெண்ட சோல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகா தார நிலையங்கள், அங் கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு மற்றும் தனியார் கல்லூரி களில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வையில் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்ப டுகிறது.
மேலும் பள்ளிக்கு செல்லாத சிறார்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள பேறுசார் மக ளிருக்கும். அங்கன்வாடி மையம் மற்றும் துணை சுகாதார நிலையத்தில் வழங்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயதுள்ள 5 லட்சத்து 49 ஆயிரத்து 813 சிறார்களுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 844 மகளிருக்கும் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கும் முகாமில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப் படுகிறது.
இதில் விடு பட்ட குழந்தைகளுக்கு 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை )அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இந்த குடற்புழு நீக்க மாத்திரை 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் 20-30 வயதுவரை உள்ள மகளிருக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும்.
குடற்புழு மாத்திரை உட்கொள்வ தினால் குழந்தை களுக்கு குடற்புழுவினால் ஏற்படும் ரத்தசோகையை தடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி, அறிவுத்திறன், உடற்வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமாக இருப்ப தற்கு உதவுகிறது.
எனவே முகாம்களில் தங்கள் குழந்தைகள், பள்ளி செல்லும் மாணவ, மாண விகள், பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மகளிரை அழைத்து வந்து குடற்புழு நீக்க மாத்தி ரைகளை பொது மக்கள் அனைவரும் பெற்று பயன டையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்