search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் குற்றங்களில் ஈடுபட்டவாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    தொடர் குற்றங்களில் ஈடுபட்டவாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

    • மணியங்காளிபட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் கரடி மணி. இவரது மகன் விக்ரம் (வயது 22).
    • காவிரி ஆற்று பகுதியில் குற்ற நடவடிக்கை யில் ஈடுபட்டதால் அவரை மோகனூர் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே மணியங்காளிபட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் கரடி மணி. இவரது மகன் விக்ரம் (வயது 22).

    இவர் மோகனூர் சுற்று வட்டார பகுதிகளில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து விக்ரம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் மோகனூர் காவிரி ஆற்று பகுதியில் குற்ற நடவடிக்கை யில் ஈடுபட்டதால் அவரை மோகனூர் போலீசார் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அதை தொடர்ந்து மோகனூர் தாலுகா நீதிபதி சுப்பிரமணி முன்னிலையில் விக்ரம் ஆஜர்படுத்தப் பட்டார். அப்போது, ஏற்கனவே உறுதி அளித்த படி செயல்படா ததாலும், மீண்டும் குற்ற நடவடிக்கை யில் ஈடுபட்ட தாலும் அவரை நீதிபதி சுப்ரமணி, மேலும் 10 மாதங்களுக்கு ஜாமீன் இன்றி சிறையில் இருக்க உத்தரவிட்டார். இதையடுத்து விக்ரம் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×