search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாசுதேவநல்லூரில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிறப்பு பள்ளியில் சர்வதேச யோகா தினம்
    X

    மாணவர்கள் யோகாசனம் செய்த காட்சி.

    வாசுதேவநல்லூரில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிறப்பு பள்ளியில் சர்வதேச யோகா தினம்

    • பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் பள்ளியின் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
    • இயன்முறை மருத்துவர் புனிதா தொடக்க உரையாற்றி மாணவர்களின் யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் பள்ளியின் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் தவமணி தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். இயன்முறை மருத்துவர் புனிதா தொடக்க உரையாற்றி மாணவர்களின் யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பாசிரியை சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், உதவி ஆசிரியர்கள் மகேஸ்வரி, முத்துலட்சுமி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×