search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான ஆக்கி போட்டிகள்
    X

    நெல்லையில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான ஆக்கி போட்டிகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தொடங்கி வைத்தார்.
    • பெண்கள் பிரிவின் முதல் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் பாளை தனியார் மேல்நிலைப்பள்ளி அணியினர் வென்றனர்.

    நெல்லை:

    மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான ஆக்கி போட்டி பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.

    ஆக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி சார்பில் நடைபெற்று வரும் இந்த போட்டிகள் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தொடங்கி வைத்தார்.2-ம் நாளான இன்று போட்டிகளை ஹென்றி ஜெரோம் மற்றும் தனியார் பள்ளி தாளாளர் ஆல்பெர்ட் ஜோசப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    14 வயதிற்கு உட்பட்டோ ருக்கான பெண்கள் பிரிவின் முதல் போட்டியில் பாளை தனியார் மேல்நிலைப்பள்ளி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அணியை வென்றனர். மற்ற போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    நிகழ்ச்சியில் ரோட்டரி தலைவர் விவேக், நிர்வாகிகள் கபீர், பால் , ஆக்கி யூனிட் ஆப் திருநெல்வேலி தலைவர் சேவியர் ஜோதி சற்குணம், செயலாளர் பீர் அலி, தடகள கழக இணைச்செயலாளர் ஜாய், செல்வின், ரவீந்தர் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இன்று மாலை பரிசுகள், கோப்பைகள் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×