search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடிகால் வாய்க்கால் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
    X

    வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி.

    வடிகால் வாய்க்கால் சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

    • மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்தது.
    • வடிகாலில் புல்பூண்டுகள், குப்பைகளை அகற்றும் பணி.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி ஊராட்சி யின் முக்கிய வடிகால் வாய்க்காலில் பல இடங்களில் வாய்க்காலின் பெரும்ப குதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து தெருக்களை சுற்றி தேங்கி நிற்கும் நிலை இருந்து வருகிறது.

    தற்போது பலமாக காற்று வீசி வருவதாலும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் சுத்தம் செய்யும் பணி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் மேற்பார்வையில் நடைபெற்றது.

    வடிகால் வாய்க்காலில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றவும், வடிகாலில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும் வடிகாலில் புல்பூண்டுகள் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்றது. வடிகால் வாய்க்காலை சுத்தம் நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு கிராம மக்கள் நன்றி பாராட்டினர்.

    Next Story
    ×