என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது

    • மேட்டூர் அணை கடந்த மாதம் 30-ந் தேதி நிரம்பியது.
    • அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து காணப்படுகிறது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வந்ததால் மேட்டூர் அணை கடந்த மாதம் 30-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது.

    தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக மீண்டும் நிரம்பியது. தற்போது அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து காணப்படுகிறது. நேற்று 6 ஆயிரத்து 598 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று அது 4 ஆயிரத்து 284 கனஅடியாக குறைந்தது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 12 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 117.90 அடியாக குறைந்து காணப்பட்டது.

    Next Story
    ×