என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் காபி விளைச்சல் அதிகரிப்பு
- காபி பயிரில் அரபிக்கா, ரொபஸ்டா ஆகிய 2 வகை பயிரிடப்படுகிறது.
- கோத்தகிரி பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.
ஊட்டி:
கோத்தகிரி பகுதியில் ஆண்டுதோறும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை 6 மாதங்கள் பெய்வது வழக்கம். இதை பயன்படுத்தி குஞ்சப்பனை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பணப்பயிரான காபி, தேயிலை, குறுமிளகு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.
குறிப்பாக காபி பயிரில் அரபிக்கா, ரொபஸ்டா ஆகிய 2 வகை பயிரிடப்படுகிறது.வழக்கமாக மே மாதம் கோடை மழையை தொடர்ந்து காபி செடிகள் பூக்க தொடங்கி விடும். அதன் பின்னர் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து காபி விளைச்சல் இருக்கும்.
பின்னர் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் காபி அறுவடை சீசன் தொடங்கும். இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காபி செடிகள் பூத்துக்குலுங்கி உள்ளதோடு, காய் பிடிக்க தொடங்கி உள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி மேலும் விளைச்சலும் அதிகரித்து வருகிறது.
தற்போது மாமரம் பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் காய்கள் கொத்து கொத்தாக காய்த்து உள்ளன. உரிய விலை கிடைக்கும் பட்சத்தில், விவசாயிகளுக்கு போதுமான லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கோத்தகிரி பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இது காபி செடிகளுக்கு உகந்ததாக உள்ளது. இதன் மூலம் காபி விளைச்சல் அதிகரித்து வருவதுடன், காபி செடிகளில் காய்கள் காய்த்து குலுங்கி வருகிறது. இதனால் காபி பயிரிட்ட விவசாயிகளுக்கு இந்த ஆண்டு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்