search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு
    X

    நீர்,மோர் பந்தல் திறப்பு விழா நடந்தபோது எடுத்த படம்

    தூத்துக்குடியில் காங்கிரஸ் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு

    • காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடியில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
    • ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்.

    தூத்துக்குடி:

    காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடியில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐ.என்.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி தலைமையில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, டி.சி.டி.யு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், எஸ்.சி. பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், தெற்கு மண்டல பொது செயலாளர் தனசேகர், தெர்மல்முத்து, அமைப்புச்சாரா தொழிலாளர் காங்கிரஸ் சுந்தர்ராஜ், ஊடக பிரிவு சுந்தர்ராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஜெயமணி, பேரையா, மனுவேல், காமாட்சி தனபால், எஸ்.சி. பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு ஜேசுதாசன், அம்பிகாபதி, கண்ணிச்சாமி பாண்டியன், முத்துராஜா, ஐ.என்.டி.யூ.சி.மனோகரன், மீனவரணி மிக்கேல் குரூஸ், உமா மகேஸ்வரி, சுரேஷ்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜ்குமார், ஜெயபால், முத்து மாலா,சுமித்ரா, குணசீலி, சோனியா, ஐ.என்.டி.யூ.சி.யை சார்ந்த சிவலிங்கம், முத்து, ரமேஷ், சாரதி, கவுதம், பாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×