என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவையாறில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு
- தேங்காய் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
- காவிரி ஆற்றில் புனித நீராடி ஐயாறப்பர் கோவிலில் சென்று வழிபட்டனர்.
தஞ்சாவூர்:
எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரக்கூடிய அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது.
இந்த தருணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது. முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த தர்ப்பணம் நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
அதன்படி இன்று ஆடி அமாவாசை என்பதால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆறு, கடற்கரை உள்ளிட்ட நீர் நிலைகளில் காலை முதலே ஏராளமான பொதுமக்கள் இறந்து போன தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்யமண்டப படித்துறையில் ஏராளமானோர் பச்சரிசி, தேங்காய் காய்கறிகள், பழங்கள், வெற்றிலை பாக்கு உள்ளிட்டவைகளை வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
பின்னர் காவிரி ஆற்றில் புனித நீராடி ஐயாறப்பர் கோவிலில் சென்று வழிபட்டனர். இன்று திருவையாறு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தர்ப்பணம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சையிலும் புதுஆற்று படித்துறையில் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இறந்த மூதாதையர்களுக்கு பச்சரிசி, எள், காய்கறி, பழங்கள், தேங்காய், வெற்றிலை பாக்கு ஆகிய பொருட்களை வைத்து தர்ப்பணம் கொடுத்து, பின்பு ஆற்றில் காதோலை கருகமணி தேங்காய், வெற்றிலைபாக்கு, எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை விட்டு புனித நீராடினர். மேலும் மாடுகளுக்கு அகத்திக் கீரையும் கொடுத்தனர்.
இந்த ஆடி மாதத்தில் மட்டும் இன்று மற்றும் மாதத்தின் கடைசி நாள் என 2 அமாவாசை வருவது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்