என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 3 பேர் கைது
    X

    கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 3 பேர் கைது

    • கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்,
    • மொத்தம் 200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி யன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கொசப்பாடி கிராமத்தை சேர்ந்த சொறிகண்ணன் (வயது 67) என்பவர் தனது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    இதைபார்த்த போலீசார், அவரை கைது செய்தனர். இதேபோல் அரசம்பட்டு கிராமத்தில் சாராயம் வி்ற்ற சின்னபிள்ளை (40), புதுப்பாலப்பட்டு கிராமத்தில் சாராயம் விற்ற பூபதி(51) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மொத்தம் 200 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×