search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரங்கம்பாடியில், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தரங்கம்பாடியில், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
    • பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும் கூடுதல் பொறுப்பு ஊதியம் வழங்க வேண்டும் பட்டப்படிப்பு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் பண்ணீர்செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தனர்.துணை தலைவர் சிவசங்கர் வரவேற்றார்.

    இதைப் போல் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் பங்கேற்றவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×