search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாதாக்கோட்டையில், நாளை ஜல்லிக்கட்டு
    X

    மாதாக்கோட்டையில், நாளை ஜல்லிக்கட்டு

    • மாடுபிடி வீரர்கள் முறையான பரிசோதனைக்குட்பட்டு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கலந்து கொள்வர்.
    • மாதாக்கோட்டையில் நாளை நடைபெறுவது 3-வது ஜல்லிக்கட்டு.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக் கோட்டையில் ஆண்டுதோறும் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு திருவிழா நடந்து வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நாளை (சனிக்கிழமை ) நடைபெறவுள்ளது.

    காளை உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் முறையான பரிசோதனைக்கு உட்பட்டு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கலந்து கொள்வர்.

    இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் 2 ஜல்லிக்கட்டு நடந்து முடிந்துள்ளது.

    மாதாக்கோட்டையில் நாளை நடைபெறுவது 3-வது ஜல்லிக்கட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×