என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரி நெடுகுளாவில்   சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
    X

    கோத்தகிரி நெடுகுளாவில் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

    • சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பகல் நேரங்களிலும் சுற்றி திரிவதாக பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    ஊட்டி

    கோத்தகிரி அருகே அமைந்துள்ளது நெடுகுளா ஒசட்டி பகுதி. அங்கு கடந்த ஒரு வார காலமாக சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருகிறது. அதனை அப்பகுதியில் உள்ள ஒருவரது வீட்டின் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவாகி உள்ளது.

    இந்த நெடுகுளா, ஒசட்டி, சுண்டட்டி பகுதியில் நான்குக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. 3000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இங்கு அரசு பள்ளி மற்றும் அரசு ஆஸ்பத்திரியும் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிறுத்தை இரவு நேரம் மட்டும் இல்லாமல் பகல் நேரங்களிலும் சுற்றி திரிவதாக பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்கக் கோரிக்கையும் விடுத்துள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதி கட்டப்பெட்டு, கோத்தகிரி என 2 வனச்சராத்திற்கு உட்பட்டதால் யார் நடவடிக்கை எடுப்பது என குலம்பி உள்ளனர்.

    மேலும் இந்த பகுதியில் புதர் மண்டி கிடக்கிறது. சுத்தம் செய்யாமல் ஏராளமான உன்னிச் செடிகள் வளர்ந்து உள்ளது. இதில் உள்ள பழங்களை சாப்பிடுவதற்காக கரடிகள் அதிகமாக வருகிறது.

    எனவே இதனை ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு அவ்விடங்களை சுத்தம் செய்ய அறிவுறுத்தல் வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். இதனால் கரடி, சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×