search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில்   கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது   -பரபரப்பு தகவல்கள்
    X

    கொலை வழக்கில் கைதானவர்களை படத்தில் காணலாம். 

    கடலூரில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது -பரபரப்பு தகவல்கள்

    கடலூரில் பிரபல ரவுடி வீரா கொலை செய்யப்பட்ட பிறகு பழிக்கு பழி கொலை சம்பவம் நடந்து வந்த நிலையில் மீண்டும் கொலை சம்பவம் நடத்த திட்டம் தீட்டிய கும்பலை போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்:

    கடலூர் கெடிலம் ஆறு பகுதியில் ஒரு கும்பல் சந்தேகம் படும்படியாக இருப்பதாக கடலூர் புதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுஅதன் பேரில் இன்ஸ்பெக்டர்கள் கவிதா, குருமூர்த்தி, மற்றும் போலீசார் சம்பவத்திற்கு சென்றனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அங்கு இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் 5 பேர் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்

    விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதில் கடலூர் குப்பன் குளம் சேர்ந்தவர்கள் ஜீவா (வயது 22), மதன்குமார் (18), நவீன்ராஜ் (வயது 20) மற்றும் புதுப்பாளையம் குப்பன் குளம் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என தெரியவந்தது‌. மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் பிரபல ரவுடி வீரா என்பவரை கொலை செய்த ஒரு கும்பலை கைது செய்தது.இந்த வழக்கு தொடர்பாக கிருஷ்ணன் என்பவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலை வழக்கு முன் விரோத தொடர்பாக கிருஷ்ணன் மனைவி காந்திமதி என்பவரை ஒரு கும்பல் கடந்த 2021 -ஆம் ஆண்டு கொலை செய்தனர். இந்த வழக்குகளில் ஜீவா, மதன் குமார் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது. மேலும் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி வீரா என்பவரின் தந்தை கனகராஜ் என்பவரை இந்த கும்பலை சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் கொலை செய்யப்பட்ட வீரா வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில் மீண்டும் இந்த கும்பல் கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்டியதும் தெரிய வந்துள்ளது. மேலும் ஏற்கனவே கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் கோவில் உண்டியல் திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சக்தி என்பவரும் மேற்கண்ட கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். கடலூரில் பிரபல ரவுடி வீரா கொலை செய்யப்பட்ட பிறகு பழிக்கு பழி கொலை சம்பவம் நடந்து வந்த நிலையில் மீண்டும் கொலை சம்பவம் நடத்த திட்டம் தீட்டிய கும்பலை போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×