search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் திருமாவளவன் விழாவில்  குண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டதால்- பரபரப்பு
    X

    கடலூரில் திருமாவளவன் விழாவில் குண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டதால்- பரபரப்பு

    • திருமாவளவன் கடலூர் அருகே கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் திடீரென்று பலத்த குண்டு வெடித்த சத்தம் கேட்டது.
    • கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் பெரும் மூச்சு விட்டபடி அமைதி அடைந்தனர்.

    கடலூர்:

    கடலூரில் நேற்று பல்வேறு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சிகளில் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி. கலந்து கொண்டு கட்சிக்கொடி ஏற்றி பேசினார். அப்போது கடலூர் பகுதிகளில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் தலைவர் திருமாவளவனை பின்தொடர்ந்து சென்றனர். நேற்று இரவு திருமாவளவன் கடலூர் அருகே கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் திடீரென்று பலத்த குண்டு வெடித்த சத்தம் கேட்டது. இதனால் தலைவர் திருமாவளவன் கடும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தலைவர் திருமாவளவனை நிர்வாகிகள் சூழ்ந்து பாதுகாத்தனர்.

    பின்னர் உடனடியாக எந்த இடத்தில் குண்டு சத்தம் கேட்டது என பார்த்த போது அங்குள்ள ஒரு காரில் ரேடியேட்டர் பலத்த சத்தத்துடன் வெடித்தது தெரியவந்தது. அப்போது இதனை பார்த்த கட்சி நிர்வாகிகள் மற்றும் போலீசார் பெரும் மூச்சு விட்டபடி அமைதி அடைந்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிகழ்ச்சி என்பதால் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கட்சி கொடியேற்று விழாவில் திடீரென்று வெடிகுண்டு வெடித்தது போல் சத்தம் கேட்டதால் அனைவரும் மத்தியிலும் பெரும் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×