என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிதம்பரத்தில் துணிகரம் செல்போன் கடையை உடைத்து கொள்ளை
- நேற்று இரவு இந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றனர்
- கதவின் பூட்டை உடைத்து கடையில் இருந்த செல்போன்கள் மற்றும் 30 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
கடலூர்:
சிதம்பரம் பஸ் நிலையம் புறக்காவல் நிலையத்திற்கு எதிரில் செல்போன் கடை உள்ளது. நேற்று இரவு இந்த கடையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றனர்.
வழக்கம்போல் இன்று காலை கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கடையின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து கடையில் இருந்த செல்போன்கள் மற்றும் 30 ஆயிரம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் நகர போலீசார் திருட்டு நடந்த கடைக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையத்திற்கு முன்பு இருக்கும் கடையில் மர்ம நபர்கள் திருடி சென்றது அந்த பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்துகிறது.
Next Story






