search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேராவூரணியில், கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    பேராவூரணியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பேராவூரணியில், கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.
    • குடிமனை பட்டாக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.

    பேராவூரணி:

    கோவில் மனை நிலங்களுக்கு வாடகை முறையை ரத்து செய்து முந்தைய பகுதி அல்லது குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும், மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், கருணாநிதி அளித்த குடிமனை பட்டாக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தினர் பேராவூரணியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, சி.பி.ஐ. மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் தொடக்கி வைத்தார்.

    இதில் ஜெயராஜ், சி.பி.ஐ. நகர செயலாளர் மூர்த்தி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கருணாமூர்த்தி, நகர விவசாய சங்க பொறுப்பாளர் சித்திரவேலு மற்றும் கோவில் மனை குடியிருப்போர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முடிவில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ரவி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

    Next Story
    ×