என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கசிவால் வீட்டில் தீ விபத்து
    X

    தீ விபத்து ஏற்பட்ட வீட்டை படத்தில் காணலாம்.

    மின் கசிவால் வீட்டில் தீ விபத்து

    • பேக்கரி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
    • நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சந்திரசேகரனின் ஓட்டு வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவர் பேக்கரி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சந்திரசேகரனின் ஓட்டு வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் அம்மாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    ஆனால் அதற்குள் வீட்டில் இருந்த பிரிஜ்ட், சோபா உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து போனது. விசார ணையில், மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அம்மா ப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×