search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புவனகிரி அருகே கார் மோதி ஓட்டல் ஊழியர் பலி
    X

    புவனகிரி அருகே கார் மோதி ஓட்டல் ஊழியர் பலி

    • புவனகிரி அருகே கார் மோதி ஓட்டல் ஊழியர் பலியானார்.
    • புவனகிரி பஸ் நிலையத்திலிருந்து இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார்.

    கடலூர்:

    புவனகிரி அருகே ஆதிவரகநந்தம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 54) சிதம்பரத்தில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். நேற்று பணி முடிந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக சிதம்பரத்திலிருந்து புவனகிரிக்கு பஸ்சில் வந்தார். புவனகிரி பஸ் நிலையத்திலிருந்து இருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். அப்போது புவனகிரியில் இருந்து விருத்தாச்சலம் செல்லும் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் மோட்டார் சைக்கிள் வந்த போது எதிரே வந்த கார் மோதி ரவி தூக்கி வீசப்பட்டார்.

    இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து ரவியை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ரவி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×