search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் அருகே வீட்டில் பதுக்கி மது பாட்டில்கள் விற்பனை:  2 வாலிபர்கள் கைது
    X

    மதுபாட்டில்கள் பதுக்கி விற்றதாக கைதான 2 பேரை படத்தில் காணலாம். 

    விழுப்புரம் அருகே வீட்டில் பதுக்கி மது பாட்டில்கள் விற்பனை: 2 வாலிபர்கள் கைது

    • வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • 22 புதுவை மது பாட்டில்கள் 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே விழுப்புரத்தில் இருந்து வளவனூர் காவல் நிலையத்திற்கு எல்லை க்குட்பட்ட கலஞ்சிகுப்பம் பகுதியில் புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்ததாக விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ நாதாவிற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா உத்தரவில் பேரில் டி.ஏஸ்.பி. உமாசங்கர் (பொறுப்பு) வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது களஞ்சிகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த புகழ் (வயது 30) அதே பகுதியைச் சேர்ந்த சந்திரன் ஆகிய இருவரும் புதுவையில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து வீட்டில் வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடமிருந்து 22 புதுவை மது பாட்டில்கள் 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×