search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்

    நெல்லையில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • வண்ணார்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் இன்று அக்கட்சி சார்பில் பூரணமதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கவனஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

    வண்ணார்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநகர தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தென்மண்டல தலைவர் ராஜபாண்டியன் கலந்து கொண்டு பேசினார். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் சின்னத்துரை, துணைசெயலாளர் சங்கர், மணி, நகர செயலாளர் மந்திரம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேலு, இளைஞரணி துணைச்செயலாளர் செல்வம், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி செயலாளர் பாக்கியசாமி மற்றும் நிர்வாகிகள் சண்முகவேல், முருகன், முத்துபாண்டி, பசுபதி, மாரிச்செல்வம், சுடலைமணி, வெங்கடேஷ், ராம், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×