என் மலர்
உள்ளூர் செய்திகள்

குன்னூரில் கொட்டி தீர்த்த கனமழை
- ரோடுகளில் மெதுவாக செல்லும்படி போலீசார் அறிவுரை
- நிலச்சரிவு அபாய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு
அருவங்காடு,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் உள் ளூர்வாசிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் பெரும்சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று கனமழை ெகாட்டி தீர்த்தது. இது மழைமானியில் 32.5 மி.மீ. ஆக பதிவாகி உள்ளது. பர்லியார் பகுதியில் 24 மி.மீ மழை கொட்டி தீர்த்து உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி வரையிலான நிலவரப்படி, பதிவான மழைஅளவு விவரம் (மில்லி மீட்டரில்): ஊட்டி-2.3, கல்லட்டி-1.0 மி.மீ, அப்பர்பவானி-2 மி.மீ, குன்னூர்-32.5 மி.மீ. பர்லியார்-24 மி.மீ, கேத்தி-5 மி.மீ, குன்னூர் ரூரல்-2 மி.மீ, உலிக்கல்-18 மி.மீ, எடப்பள்ளி-2 மி.மீ, கோத்த கிரி-4 மி.மீ, கீழ்கோத்தகிரி-2 மி.மீ, கோடநாடு-4 மி.மீ.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று மட்டும் 98.8 மி.மீ மழை பெய்து உள்ளது. இது சராசரியாக 3.41 மி.மீ என்ற அளவில் பதிவாகி உள்ளது. நீலகிரியில் கனமழை காரணமாக அங்கு மேக மூட்டத்துடன் கடும் குளிர் நிலவி வருகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் விடுதிகளுக்குள் முடங்கி கிடந்தனர். விநாயகர் சதுர்த்தியான நேற்று உள்ளூர்வாசிகளும் பெரியளவில் வெளியே நடமாடவில்லை.
இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கெ னவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக மலைப்பாதை யில் இருந்து சமவெளிக்கு செல்லும் வாகனங்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் மற்றும் மண் சரிவு ஏற்படும் இடங்களில் எக்காரணம் கொண்டும் வாகனங்களை நிறுத்தக்கூடாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை மாவட்ட பேரிடர் மீட்பு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் மழையின் தாக்கம் அதிகரித்து வரு வதால், நிலத்தில் ஈரத்தன்மை அதிகரித்து வருகிறது. மழை நின்றவுடன் வெயிலும் திடீரென சுட்டெரிப்பதால், நிலத்தில் ஈரம் காய்ந்து லேசாக பிளவு ஏற்படுகிறது. இது மண் சரிவுக்கு அறிகுறி என்பதால் அந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அறிவுரை கூறி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் பாதிப்புகள் மற்றும் பேரிடரை சமாளிப்பது எப்படி என்பது தொடர்பாக வருவாய்த்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.