என் மலர்
உள்ளூர் செய்திகள்

நேருக்கு நேர் பைக் மோதி விபத்து
- மோட்டார் சைக்கிளில் பெரியமணலி-வேலகவுண்டன் பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
- எதிரே அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே செம்மங்காட்டுபுதூர் பகுதியில் செங்கல் சூளை யில் வேலை பார்த்து வருப வர் அஜித் குமார் (வயது 27). இவரும் அதே சூலையில் வேலை பார்த்து வரும் ரவி (54) என்பவரும் வேலையை முடித்து விட்டு இரவு சுமார் 7 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பெரியமணலி-வேலகவுண்டன் பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தொட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வந்த போது மோட்டார் சைக்கிளை அஜித்குமார் ஓட்டிச் சென்றார், பின்னால் ரவி அமர்ந்திருந்தார்.
அப்போது எதிரே அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது. இதில் எதிரே அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒட்டி வந்தது அதே பகுதியை சேர்ந்த குமாரசாமி என்ப வர். இதில் நேருக்கு நேர் மோதியதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்க ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேலக வுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் மோட்டார் பைக்கை ஒட்டி வந்து விபத்து ஏற்ப டுத்திய குமாரசாமி மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






