search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கஞ்சா சாக்லெட் பதுக்கி விற்றவடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது
    X

    கஞ்சா சாக்லெட் பதுக்கி விற்றவடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது

    • 1 கிலோ கஞ்சா சாக்லெட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை சூலூர் தென்னம்பாளையத்தில் உள்ள பீடா கடை அருகே சிலர் கஞ்சா சாக்லெட்டை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா தலைமையில் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு கஞ்சா சாக்லெட்டை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரும் தற்போது அரசூரில் வசித்து வரும் சாகர் மெகந்தி (வயது 25) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 26 கிலோ கஞ்சா சாக்லெட்டை ேபாலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போலீசார் கைது செய்யப்பட்ட சாகர் மெகந்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    பேரூர் போலீசார் சீராபாளையம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்குள்ள சமோசா கடை அருகே கஞ்சா சாக்லெட்டை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரதீப் பெகரா (39) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சா சாக்லெட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போலீசார் பிரதீப் பெகராவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×