என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாளையில் அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரைநிர்வாண போராட்டம்
- போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மேல்சட்டை அணியாமலும், பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டியும் கலந்து கொண்டனர்.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகர துணை கமிஷனர் சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
நெல்லை:
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் பாளை தியாகராஜநகரில் உள்ள மேற்பார்வை மின்பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மேல்சட்டை அணியாமலும், பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டியும் கலந்து கொண்டனர்.
மாநில துணைத்தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜாமணி முன்னிலை வகித்தார். அப்போது அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வினை மத்திய அரசு அளித்த தேதி முதல் நிலுவையுடன் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மின்வாரியமே ஏற்று நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகர துணை கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்