என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாங்குநேரி அருகே பல்நோக்கு கட்டிட பணிகள்
    X

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டிய காட்சி.

    நாங்குநேரி அருகே பல்நோக்கு கட்டிட பணிகள்

    தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்நோக்கு கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நாங்குநேரியில் நடந்தது.

    நெல்லை:

    நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, நாங்குநேரி ஒன்றியம், நாங்குநேரி கிழக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட சங்கனாங்குளம் பஞ்சாயத்தில் உள்ள சங்கனாங்குளம் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பல்நோக்கு கட்டிட பணிகளுக்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, நாங்குநேரி கிழக்கு, மத்திய, மேற்கு வட்டாரம், பாளையங்கோட்டை தெற்கு வட்டாரம் ஆகிய வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் ரவீந்திரன் ராமஜெயம், வாகைதுரை, நளன், மற்றும் மாநில மகிளா காங்கிரஸ் மகளிரணி பொதுச்செயலாளர் குளோரிந்தால் சங்கனாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர், சின்ன தம்பி,

    மாவட்ட பொதுச்செயலாளர் நம்பிதுரை, வட்டார கிராம காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் வெள்ளசாமி, ஐசக் வாட்ஸ், வாலசுப்பிர மணியன், வடிவேல், சிதம்பரம், சண்முகம், ஜெயசீலன், சுந்தர் புஷ்பராஜ் மாணிக்கம், பாளை வடக்கு வட்டார காங்கிரஸ் கவுன்சிலர் தெய்வாணை, மற்றும் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கட்சி நிர்வாகிகள், சங்கனாங்குளம் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டார்கள்.

    Next Story
    ×