search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாத்தா, பாட்டிகள் தினம் கொண்டாட்டம்
    X

    தாத்தா, பாட்டிகள் தினம் கொண்டாட்டம்

    • போட்டிகளில் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை எஸ்.வி.ஜி.விமெட்ரிக் பள்ளியில் தாத்தா, பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி தாளாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். முதல்வர் சசிகலா வரவேற்றார். பள்ளி செயலாளர் ராஜேந்திரன், அறங்காவலர் தாரகேஸ்வரி, நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர். விழாவில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தாத்தா, பாட்டிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முதுமையை மறந்து இளமையான நினைவு கூற நடனம் மற்றும் விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி மகிழ்ந்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த பள்ளி நிர்வாகத்துக்கு தாத்தா, பாட்டிகள் நன்றி கூறினார்.

    Next Story
    ×