search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    589 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
    X

    கலெக்டர் தீபக்ஜேக்கப்

    589 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    நாளை (செவ்வா ய்க்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு காலை 11 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    எனவே கிராம சபை கூட்டத்திற்கு மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×