என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் அரசு ஆஸ்பத்திரி கட்டிட பணிகள் தீவிரம்
- பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை பகுதிகள் செயல்பட்டு வருகின்றது.
- வெளிநோயாளிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது
கோத்தகிரி
கோத்தகிரியில் உள்ள பழமையான கட்டிடங்களில் ஒன்று அரசு மருத்துவமனை கட்டிடமாகும். இந்த கட்டிடத்தில் வெளிநோயாளிகள் பிரிவு பகுதி, அவசர சிகிச்சை பிரிவு பகுதி, பெண்கள் மகப்பேறு பகுதி என பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை பகுதிகள் செயல்பட்டு வருகின்றது. இங்கு ரத்த வங்கி கட்டிடமும், பிணவறை கட்டிடமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக கட்டப்பட்டது. நாளுக்குநாள் அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் வரும் நோயாளிகளின் வருகையும், வெளிநோயாளிகளின் வருகையும் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பழைய அவசர சிகிச்சை பிரிவில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்த சிக்கலை போக்கும் விதமாக அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய நவீன வசதியுடன் கூடிய கட்டிடத்தை கட்டும் பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த கட்டிட பணியானது மேலும் விரைவாக முடிக்க வேண்டி கடந்த சில வாரங்களாக இரவும், பகலாக நடைபெற்று வருகிறது. இதனால் கட்டிட பணி வேகமாக முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்க்காக கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கபடுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்