என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்பாக்கம் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி
    X

    கல்பாக்கம் அருகே அரசு பஸ் மோதி வாலிபர் பலி

    • ஜெயசீலன் பாலாற்று பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார்.
    • பலத்த காயம் அடைந்த ஜெயசீலன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த வாயலூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது32), இவர் அதே பகுதியில் உள்ள பாலாற்று பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெயசீலன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

    இதேபோல் மாமல்லபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் (64) என்பவர் திருக்கழுக்குன்றம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். நல்லூர் நோக்கி சென்ற அரசு பஸ்மோதியில் கிருஷ்ணன் பலியானார்.

    Next Story
    ×