search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவுண்டம்பாளையம் ஜி.என். மில்ஸ் மேம்பாலத்தில் வாகனங்கள் சோதனை ஓட்டம்
    X

    கவுண்டம்பாளையம் ஜி.என். மில்ஸ் மேம்பாலத்தில் வாகனங்கள் சோதனை ஓட்டம்

    • மேம்பாலம் சுமார் ரூ.41.83 கோடி மதிப்பில் 658 மீட்டர் தூரத்தில் நான்கு வழி பாதையாக அமைக்கப்பட்டது.
    • வருகிற ஜூலை 1-ந் தேதி மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வர திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை கவுண்டம்பாளையம் அடுத்துள்ள ஜி.என்.மில்ஸ் மேம்பாலம் பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டு தொடங்கப்பட்டது.

    இந்த மேம்பாலம் சுமார் ரூ.41.83 கோடி மதிப்பில் 658 மீட்டர் தூரத்தில் நான்கு வழி பாதையாக அமைக்கப்பட்டது. கொரோனா நோய் பரவல் தீவிரமாக இருந்த நிலையில் மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டு அதன்பிறகு தொடங்கப்பட்டது.

    தற்போது மேம்பால பணிகள் கிட்டத்தட்ட 99 சதவீதம் நிறைவடைந்து விட்டது. வருகிற ஜூலை 1-ந் தேதி மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வர திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக சோதனை ஓட்டம் நடத்த தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டனர். இன்று காலை 10 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சோதனை ஓட்டத்திற்காக மேம்பாலத்தை திறந்துவிட்டனர். தற்போது மேம்பாலத்தில் ஏறி வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இன்னும் 2 அல்லது 3 நாட்கள் சோதனை ஓட்டம் இருப்பதால் காலையில் இருந்து மாலை வரை இந்த மேம்பாலத்தில் ஏறி சென்று வரலாம். மேம்பால மின்சார கம்பங்கள், சென்டர் மீடியன் வேலை, பெயிண்ட் வேலை இரவில் செய்யப்படுவதால் இந்த மேம்பால வழி தற்காலிகாமாக இரவில் இருக்காது என்று தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேம்பாலம் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் இந்த பாதையில் இனி நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கணபதி, சரவணம்பட்டி பகுதியில் இருந்து இந்த வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.

    மேலும் கணுவாய் , – ஆனைக்கட்டி சாலையில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையை அதாவது ஜி.என்.மில்ஸ் பாலத்தை கடந்து சத்தி சாலைக்கு செல்லமுடியும் என்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்துகொண்டே இருந்தது. தற்பொது மேம்பாலம் பணிகள் முடிவுற்றதால் கோவையில் இருந்து துடியலூர், பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஊட்டி, கோத்தகிரி, குன்னூருக்கு சென்று வர இனி எளிதாக இருக்கும் என்று கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×