என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கோபூஜை
    X

    சிறப்பு கோபூஜை நடந்தது.

    சீர்காழி சட்டைநாதர் கோவிலில் கோபூஜை

    • கொடிமரம் அருகே எழுந்தருளும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.
    • பசு மாடு மற்றும் கன்று சிறப்பு பூஜைகள் செய்து கோபூஜை வழிபாடு நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

    திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய தலமாகும்.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலில் புரட்டாசி மாத பிறப்பை ஒட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடைபெற்றது, முன்னதாக கொடிமரம் அருகே எழுந்தருளும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது.

    பின்னர் கொடிமர நந்தி பகவானுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து கோ சாலையிலிருந்து வரவழைக்கப்பட்ட பசுமாடு மற்றும் கன்று சிறப்பு பூஜைகள் செய்து கோ பூஜை வழிபாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் பிரம்ம தீர்த்த குளக்கரை அருகே உள்ள காசி விஸ்வநாதர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெ ற்றது.

    Next Story
    ×