search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொது மருத்துவ முகாம்
    X

    முகாமில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

    பொது மருத்துவ முகாம்

    • இ.சி.ஜி., ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
    • முடிவில் ஊராட்சி துணை தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

    சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் வட்டார மருத்துவர் டாக்டர் கிளின்டன், ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சி மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி செயலர் உமாபதி அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திமுக மாவட்ட செயலாளரும், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. யுமான நிவேதா முருகன் முகாமை திறந்து வைத்து பெசினார்.

    முகாமில் கண் பரிசோதனை, சக்கரை நோய் கண்டறிதல், ஹெச்.ஐ.வி. சோதனை கர்ப்பிணி பெண்களுக்கான ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்தல், இ சி ஜி, ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நோய்களை கண்டறிந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கர், திமுக துணைத் தலைவர் செல்வமணி, ஒன்றிய செயலாளர்கள் இமயநாதன், முருகமணி, மற்றும் நடராஜன், செவிலியர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் சுகாதார அலுவலர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×