search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சியில் 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஜவுளிக்கடை ஊழியர்
    X

    பொள்ளாச்சியில் 8-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஜவுளிக்கடை ஊழியர்

    • மாணவி தூக்கத்தில் என்னை தொடாதே என்னை விட்டு விடு என சத்தம் போட்டுள்ளார்.
    • போலீசார் முகமது விபின்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரது வீட்டின் அருகே உறவினரான முகமது விபின்சன் (வயது 31) என்பவர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    உறவினர் என்பதால் சிறுமியின் வீட்டிற்கு முகமது விபின்சன் அடிக்கடி சென்று வந்தார். சிறுமியும் உறவினர் என்பதால் அவருடன் பேசி வந்தார்.

    இந்த நிலையில் முகமது விபின்சன் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் மாணவியிடம் சில்மிஷ சேட்டைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை மாணவி கண்டித்துள்ளார்.

    இருந்த போதிலும் அவர், மாணவியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்து விட்டார். இது கடந்த ஓராண்டு காலமாக தொடர்ந்து வருகிறது. இதனை வெளியில் சொல்லக்கூடாது எனவும் மிரட்டி வந்துள்ளார். இதனால் மாணவியும் தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இரவு மாணவி, தனது தாயாருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மாணவி தூக்கத்தில் என்னை தொடாதே என்னை விட்டு விடு என சத்தம் போட்டுள்ளார்.

    இதையடுத்து மறுநாள் காலை மாணவியிடம் அவரது தாயார் இரவில் ஏன் அப்படி சத்தம் போட்டாய் என்று கேட்டார். அதன்பின்னரே மாணவி தனக்கு நேர்ந்த அனைத்தையும் தாயிடம் தெரிவித்தார்.இதை கேட்டதும் அதிர்ச்சியான மாணவியின் தாய், சம்பவம் குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், முகமது விபின்சன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் முகமது விபின்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×