search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் கோவில் மண்டலாபிஷேக விழா
    X

    விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் இருந்த போது எடுத்த படம்.

    விநாயகர் கோவில் மண்டலாபிஷேக விழா

    • பரமத்தி வேலூரில் வல்லப விநாயகர் கோவில் மண்டலாபிஷேக விழா நடந்தது.
    • நைவேத்தியங்களுடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் 450 ஆண்டுகள் பழமையான வல்லப விநாயகர் ஆலயத்தில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது.

    மூலவர் வல்லப விநாயகருக்கு பல வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் பலவகை தீபாராதனைகள் உடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து கன்னிமூல கணபதி, விசாலாட்சி சமேத விஸ்வேஷ்வரர், நந்தியம்பெருமான், வள்ளி தெய்வயானை உடனாகிய முருகப்பெருமான், காலபைரவர் மற்றும் நவகி–ரகங்களுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, நைவேத்தியங்கள் உடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    விழா முடிவில் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×