என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஞ்சலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
- பன்னீர்,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் கீழத்தஞ்சாவூர் கிராமத்தில் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி பவுர்ணமியையொட்டி பஞ்சலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக சாமிக்கு மஞ்சள்பொடி,மாப் பொடி,தேன், திரவியபொடி, பால்,தயிர்,இளநீர், பன்னீர்,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






