என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏர்வாடியில்  அடகு வைத்த தங்க நகைகளை மீட்டு தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி
    X

    ஏர்வாடியில் அடகு வைத்த தங்க நகைகளை மீட்டு தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி

    • சம்பவத்தன்று ஸ்டாலின் களக்காடு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஸ்டாலினிடம் நகைகளை அடகு வைத்துள்ளதாகவும், அதனை திருப்புவதற்கு ரூ.1 லட்சம் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.

    களக்காடு:

    சேரன்மகாதேவி அருகே உள்ள தெய்வநாயகபேரி கீழத்தெருவை சேர்ந்தவர் இம்மானுவேல். இவரது மகன் ஸ்டாலின் (வயது 24). விவசாயி.

    நகை அடகு

    சம்பவத்தன்று இவர் களக்காடு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஸ்டாலினிடம் தான் ஏர்வாடியில் உள்ள ஒரு வங்கியில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளதாகவும், அதனை திருப்புவதற்கு ரூ.1 லட்சம் கொடுக்கும்படியும் கேட்டுள்ளார்.

    மேலும் நகையை திருப்பியவுடன் தங்களிடமே தந்து விடுகிறேன் என்றும் கூறி உள்ளார். இதை உண்மை என்று நம்பிய ஸ்டாலின் அவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட மர்ம நபர் ஸ்டாலினை ஏர்வாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அவரை வங்கியின் அருகே நிற்க சொல்லி விட்டு, நகையை திருப்பி வருகிறேன் என்று கூறி வங்கிக்குள் சென்றார்.

    விசாரணை

    ஆனால் நீண்டநேரமாகி யும் திரும்ப வரவில்லை. அந்த மர்ம நபர் ரூ.1 லட்சத்துடன் தப்பி சென்று விட்டதை அறிந்த ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×