search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு
    X

    கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்க திரண்ட பொதுமக்கள்.

    கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு

    • உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர்.
    • சிறிய வகை நெத்திலி 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் தங்கள் விசை மற்றும் பைபர் படகுகளில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். இதனை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் மீன் விற்பனை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும். இதனை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டு வாங்கி சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மீன் வறுத்து குறைவாக இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்தது.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதல் ஏராளமானோர் திரண்டு போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றதை காண முடிந்தது. மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. வழக்கமாக 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் சங்கரா மீன் 400 ரூபாய்க்கும், சிறிய வகை சங்கரமீன் 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வஞ்சிரம் ஒரு கிலோ 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    கடோரா வகை மீன் கிலோ 550 ரூபாய்க்கும், பன்னி சாத்தான் மீன் 450 ரூபாய்க்கும், நெத்திலி வகை மீன் 250 ரூபாய்க்கும், சிறிய வகை நெத்திலி 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஏற்கனவே காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மீன்களை குறைந்த அளவில் வாங்கி சென்றதை காண முடிந்தது. இருப்பினும் கடலூர் துறைமுகத்தில் இன்று காலை மீன்கள் வாங்கப் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    Next Story
    ×