என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
முதன்முறையாக சர்வதேச விதிகளுடன் சிறுவர்களுக்கான கால்பந்தாட்ட லீக் போட்டிகள் - பாளை வ.உ.சி மைதானத்தில் இன்று தொடங்கியது
Byமாலை மலர்12 Nov 2022 9:17 AM GMT
- நெல்லை மாவட்டத்தில் முதன்முறையாக சர்வதேச கால்பந்தாட்ட விதிகளுடன் சிறுவர்களுக்கான லீக் போட்டிகள் பாளையில் இன்று தொடங்கியது.
- போட்டியில் ஆண்கள் பிரிவில் 24 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 30 அணிகள் பங்கேற்று உள்ளன.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் முதன்முறையாக சர்வதேச கால்பந்தாட்ட விதிகளுடன் சிறுவர்களுக்கான லீக் போட்டிகள் பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று தொடங்கியது.
30 அணிகள்
மாவட்ட கால்பந்தாட்ட கழகம் சார்பில் வ.உ.சி. உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 24 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 30 அணிகள் பங்கேற்று உள்ளன.
நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான அணியினர் இதில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு அணிக்கும் தலா 8 பேர் வீதம் 240 பேர் பங்கேற்றனர்.
12 வயதுக்கு குறைவான பெண்கள், 10 வயதிற்கு குறைவான ஆண்கள், 10 முதல் 12 வயதிற்குள்ளான ஆண் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. நாளை வரை போட்டிகள் நடைபெற உள்ளது.
நாளை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு பரிசு வழங்க உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X