search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி தாலுகா அலுவலகத்தில்  தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி
    X

     தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடந்த போது எடுத்த படம்.

    சிவகிரி தாலுகா அலுவலகத்தில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி

    • சிவகிரி தாலுகா அலுவலக கூட்டரங்கில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
    • தாசில்தார் செல்வக்குமார் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    தென்மேற்கு பருவமழை முன் எச்சரிக்கை பாதுகாப்பு முன்னிட்டு வாசுதேவநல்லூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா தலைமையிலான குழுவினர் நிலைய அலுவலர் போக்குவரத்து பார்வதி நாதன், சிறப்பு நிலைய அலுவலர் மாடசாமி ராஜா மற்றும் குழுவினர் சிவகிரி தாலுகா அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. தாசில்தார் செல்வக்குமார் தலைமை தாங்கினார்.

    மேலும் மலைக்கோவில் நீர்நிலையில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் முன்பு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு செய்து காட்டினர். இந்நிகழ்ச்சியில் குடிமைப் பொருள் வழங்கல் தாசில்தார் சாந்தி, தேர்தல் பிரிவு தாசில்தார் பரமசிவன், தலைமையிடத்து துணை தாசில்தார் வெங்கடசேகர், அலுவலகர்கள் மற்றும் பாலவிநாயகர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×