search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லஞ்சம் வாங்கிய தீயணைப்பு அதிகாரி கைது
    X

    கைதான முனியாண்டி.

    லஞ்சம் வாங்கிய தீயணைப்பு அதிகாரி கைது

    • ரூ.14 ஆயிரத்தை தனது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவருக்குள் வைக்குமாறு கூறினாா்.
    • போலீசார் தஞ்சாவூா் பழைய பஸ் நிலையம் அருகே மறைந்திருந்து கண்காணித்தனா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் நாஞ்சி க்கோட்டை சாலையில் புதிதாகக் கட்டடப்படும் ஆஸ்பத்திரிக்கு தடையில்லாச் சான்று பெற அதன் உரிமையாளா் அரண்மனை வளாகத்திலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மாவட்ட உதவி அலுவலா் முனியாண்டியிடம் (வயது 56) கடந்த செப்டம்பா் 13 ஆம் தேதி விண்ணப்பித்தாா்.

    அப்போது ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்ட முனியாண்டி, பின்னா் அதில் ரூ. 1000 குறைத்துக் கொண்டு ரூ. 14 ஆயிரத்தை பழைய பஸ் நிலையத்துக்கு வந்து தருமாறு கூறினாா்.

    ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மருத்துவமனை உரிமையாளா் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு காவல் பிரிவினரிடம் புகாா் செய்தாா்.

    இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் துணைக் சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், பத்மாவதி ஆகியோர் தஞ்சாவூா் பழைய பஸ் நிலையம் அருகே மறைந்திருந்து கண்காணித்தனா்.

    அப்போது பழைய பஸ் நிலையத்துக்கு வந்த முனியாண்டி கைப்பேசி மூலம் மருத்துவமனை உரிமையாளரை வரவழைத்து ரூ. 14 ஆயிரத்தை தனது மோட்டார் சைக்கிளின் டேங்க் கவருக்குள் வைக்கு மாறு கூறினாா்.

    அதன்படி உரிமையாளா் பணத்தை வைத்ததும், புறப்பட முயன்ற முனியா ண்டியை ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    பின்னர் முனியாண்டியை அரண்மனை வளாகத்தில் உள்ள தீயணைப்பு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து முனியாண்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×