search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதங்காவெளி நல்லமாகாளியம்மன் கோவிலில் திருவிழா
    X

    காவடி எடுத்து ஊர்வலமாக வந்த பக்தர்கள்.

    மருதங்காவெளி நல்லமாகாளியம்மன் கோவிலில் திருவிழா

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • விளக்கு பூஜையும், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றன.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே மருதங்காவெளி நல்லமாகாளியம்மன் கோவிலில் வருஷாபிஷேக உற்சவ திருவிழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது.

    இதனை முன்னிட்டு கோவிலூர் கோவிலில் இருந்து சுவாமி எடுத்து வரும் நிகழ்ச்சியும், விளக்கு பூஜையும், முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றன.

    இந்நிலையில், நேற்று அம்மனுக்கு காவடி மற்றும் பால்குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக காலை வெள்ளக்குளம் கரையிலிருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று,

    வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. பின்னார், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கஞ்சி வார்த்தல், மாவிளக்கு போடுதல், முடி இறக்குதல் ஆகியவை நடந்தது.

    இரவு அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

    Next Story
    ×