search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில் பெண் மருத்துவ ஊழியர் மாயம்
    X

    பண்ருட்டியில் பெண் மருத்துவ ஊழியர் மாயம்

    • பண்ருட்டியில் பெண் மருத்துவ ஊழியர் மாயமானார்.
    • சந்தியாவின் தந்தை சகாதேவன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே புதுப்பேட்டை மேட்டா மேடு பகுதியை சேர்ந்தவர் சகாதேவன். அவரது மகள் சந்தியா (வயது 24) இவர் எம்.எஸ்.சி. முடித்துவிட்டு புதுவை மதகடிப்பட்டு உள்ள மணக்குள விநாயகர் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கடந்த 8- தேதி வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த சந்தியாவின் பெற்றோர் பல்வேறு இடங்களில் இவரை தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் இவர் கிடைக்கவில்லை. இது குறித்து சந்தியாவின் தந்தை சகாதேவன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து சந்தியா என்ன ஆனார் எங்கு சென்றார் யாரேனும் கடத்தப்பட்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×