search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் விவசாயி 8-வது நாளாக தொடர் உண்ணாவிரதம்
    X

    பெண் விவசாயி 8-வது நாளாக தொடர் உண்ணாவிரதம்

    • வீட்டின் மேல் உயர்மின் அழுத்த கம்பிகள் செல்வதை எதிர்த்து போராட்டம்
    • விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட திட்டம்

    கருமத்தம்பட்டி :

    கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள செம்மாண்டம் பாளையம் கிராமம் கோதபாளையத்தில் தமிழ்நாடு மின் தொட ரமைப்பு கழகம் சார்பில் அரசூர் முதல் ஈங்கூர் வரையில் 230 கிலோ வாட் உயர் மின் கோபுரம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் பல இடங்களில் திட்டப் பாதையை நேராக செயல்படுத்தாமல் குறுக்கும், நெடுக்குமாக மின் கோபுரங்கள் அமைக்க ப்பட்டு உள்ளது. இதனால் ஒரு சிலர் குடியிருப்பு பகுதியில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சோமனூர் அடுத்த கோதபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. விவசாயி. இவரது வீட்டின் மேல் உயர்மின் அழுத்த கம்பிகள் செல்லும் வகையில் வீட்டின் அருகிலேயே மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த மின் கோபுரத்தை அமைப்பதில் முறைகேடு என்றும், நேராக மின்கோபுரம் அமைக்காமல் அங்கொன்றும், இங்கொன்றும் அமைக்கப்ப ட்டு உள்ளது. இதனால் இவற்றை சரி செ ய்யக்கோரி கிருஷ்ணவேணி கடந்த ஒரு வாரமாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். இன்று 8-வது நாளாக அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.அவருக்கு ஆதரவாக விவசாய சங்கங்களும், விவசாயிகளும், உறவினர்களும் அவருடன் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். கிருஷ்ணவேணியின் கோரிக்கையை வலியுறுத்தி விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×