search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    10-ம் வகுப்பு தேர்வில் மகன் தேர்ச்சி பெறாததால் தந்தை தற்கொலை
    X

    கோப்புபடம்

    10-ம் வகுப்பு தேர்வில் மகன் தேர்ச்சி பெறாததால் தந்தை தற்கொலை

    • மனைவி மேரி மற்றும் மகன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் சந்திரமோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மடத்துக்குளம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள பெரிய வட்டாரம் கோவில்கோவில் வீதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 46 ). பிரிட்ஜ் மற்றும் ஏ.சி. பழுது நீக்கும்தொழில் செய்து வந்தார்.

    கடந்த 20ந்தேதி பத்தாம் வகுப்பு தேர்வு வெளியான நிலையில் அவரது மூத்த மகன் பெயில் ஆனதால் சந்திரமோகன் கவலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மனைவி மேரி மற்றும் மகன் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் பேன் மாட்டும் கொக்கியில் சந்திரமோகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மடத்துக்குளம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×