search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • சிறையில் உள்ள விவசாயிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல்மா சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போட ப்பட்ட குண்டர் சட்டத்தை கண்டித்தும், சிறையில் உள்ள விவசா யிகளை விடுதலை செய்ய கோரியும், விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெறக்கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் சீர்காழி நகர தலைவர் கோவி.நடராஜன் தலைமை வகித்தார்.

    தமிழக காவிரி விவசாயிகள் சங்கங்களின் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் கணேசன், இயற்கை விவசாயி நலம்.சுதாகர், அபாஸ்அலி,அரவிந்தன்,செந்தில்முருகன் முன்னிலை வகித்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாவட்டத்தலைவர் ஆ.ராமலிங்கம் ,ஜெக.சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    அதனை தொடர்ந்து சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விவசா யிகள் பேரணியாக சென்று உ.அர்ச்சனாவிடம் விவசாயிகளின் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனுவினை அளித்தனர்.

    தமிழக அரசு உரிய நடவடி க்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தனர்.

    Next Story
    ×