search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் போராட்டம்
    X

    பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாயிகள் போராட்டம்

    • காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.
    • டைல்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிற அனுமதியை தமிழக அரசு ரத்து செய்து உத்திரவிட வேண்டும்.

    அம்மாப்பேட்டை:

    சாலியமங்களம் அருகே விளை நிலங்கள் நடுவே தனியார் டைல்ஸ் உற்பத்தி நிறுவனம் தொடங்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போரா–ட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, தாசில்தார் மதுசூதனன் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விவசாய சங்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது விவசாய சங்கத்தினர் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த நிலையில் வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.

    விளை நிலங்களை பாதிக்கும் வகையில் டைல்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிற அனுமதியை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்து உத்திரவிட வேண்டும் என்று கூறினர். உங்களது கோரிக்கைகள் குறித்து மேல் அதிகாரிகளிடம் எடுத்து கூறப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர்.

    Next Story
    ×