என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- ஒரு மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அலுவலக உதவி பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு சென்றனர்.
- பத்து நாட்களாக வெள்ளநீர் சூழ்ந்திருந்து தண்ணீர் வடிந்த பிறகு மக்கள் கிராமத்துக்கு திரும்பி சென்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தண்டேசநல்லூர் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகம் முன்பு நாதல்படுகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நேற்று வந்து கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கிராமத்துக்கு மின்சாரம் வராததால் கிராமமே இருளில் மூழ்கி கிடந்தது.
இதனால் அனைவரும் சிரம் அடைந்து வருகின்றோம்.எனவே உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 1 மணி நேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அலுவலக உதவி பொறியாளரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு சென்றனர்.
கொள்ளிடம் ஆற்றில் அதிக நீர் வரத்து வந்தபோது ஆற்றின் கரையோரம் உள்ள நாதல்படுகை திட்டு கிராமத்தில் பத்து நாட்களாக வெள்ளநீர் சூழ்ந்து இருந்து தண்ணீர் வடிந்த பிறகு பின்னர் மக்கள் கிராமத்துக்கு திரும்பி சென்றனர்.
தண்ணீர் சூழ்ந்து இருந்ததால் பத்து நாட்களாக கிராமத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது மீண்டும் மின்சாரம் வழங்குவது நிறுத்தப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தண்ணீர் கிராமத்தை சூழ்ந்து இருந்ததால் மின் கம்பிகள் மற்றும் மின் கம்பங்கள் முதலியவைகளை ஆய்வு செய்து சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்