என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்- கலெக்டர் அருணா தலைமையில் நடந்தது

- 50 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது
- உரங்களின் சேமிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் தகவல்
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 50 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் அருணா பேசியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் வேளாண்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேவை யான மரநாற்றுகள் குறித்து விவசாயிகள் கோரிக்கைக்கு இணங்க கூட்டம் நடத்த நடவடிக்கை மேற்ெகாள்ளப்படும்.
அங்கக வேளாண்மை மூலம் அங்கீகரிக்கப்பட்ட இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட விதைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நீலகிரி கூட்டுறவு வணிக சங்கம் மூலம் உரங்களை சிறியளவில் சில்லரை விற்பனை மூலம் சிறு,குறு விவசாயிகளுக்கு 5 முதல் 10 கிலோ வரையிலான உரங்களை வழங்குமாறு கோரிய விவசாயிகளின் கோரிக்ைக குறித்து ஆய்வு செய்யப்படும்.
மேலும் என்.சி.எம்.எஸ் மூலம் உரங்களிடம் சேமிப்பிடம் அமைப்பதற் கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. உழவர் கடன் அட்டைக்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப் பட்டு வருகிறது.
விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், தோட்டக்க லைத்துறை இணை இயக்கு நர் ஷிபிலாமேரி, இணை இயக்குநர் (மருத்துவபணி கள்) பழனிசாமி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சாம் சாந்தகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
